×

மக்களவைத் தொகுதிகளுக்கான வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்: மநீம அறிவிப்பு

சென்னை: மநீம கட்சி சார்பாக தென்சென்னை, கோவை, மதுரை ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கான வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் 07-07-2023 அன்று தென்சென்னை, கோவை, நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிக்கு வார்டுவாரியாக பொறுப்பாளர்கள் நியமிப்பது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் தொடர்ச்சியாக, ஏராளமான நிர்வாகிகள் இப்பொறுப்பேற்க விருப்பம் தெரிவித்துள்ளது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நிர்வாகிகள் தங்களது விவரங்களை கீழ்க்கண்ட லிங்கில் உள்ள விண்ணப்பத்தில்(Google Form) பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தலைவரின் மேற்பார்வையில் பரிசீலனை செய்யப்பட்டு வார்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வார்டு பொறுப்பாளர்கள் நியமனத்தில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள்(பொறுப்பு), மாவட்ட அமைப்பாளர்கள், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாநில செயலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

The post மக்களவைத் தொகுதிகளுக்கான வார்டு பொறுப்பாளர்களாக செயல்பட விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்: மநீம அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Densen ,Govai ,Madurai ,Maniema Party ,Mania ,Dinakaran ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...