×

பல துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு: தலைநகரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

டெல்லி: கீதா காலனி மேம்பாலம் அருகே பெண் ஒருவரின் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து இன்று காலை போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு கருப்பு பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில்; ஒரு பாலித்தீனில் உடலின் தலைப்பகுதியும், மற்றோரு பாலித்தீன் பையில் உடலின் மற்ற பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் பாகங்களை கைப்பற்றிய போலீசார் கொல்லப்பட்ட பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு மே மாதம், ஷ்ரத்தா வால்கர் என்ற பெண்ணின் கொலை வழக்கைப் போல், டெல்லியில் மற்றொரு கொலை நடந்திருப்பதால் டெல்லியில் மக்கள் பதற்றம் நிலவி வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்; கீதா காலனி மேம்பாலம் அருகே இரண்டு பைகளில் பெண்னின் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்தன. நீண்ட முடியின் அடிப்படையில், இது ஒரு பெண்ணின் உடல் என்று நாங்கள் கருதுகிறோம். இது இன்னும் அடையாளம் காணப்படவில்லை, விசாரணை நடந்து வருகிறது இவ்வாறு கூறினார்.

The post பல துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் மீட்பு: தலைநகரில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Geeta Colony ,Dinakaran ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...