×

பூனை மீது பைக் மோதிய தகராறில் சண்டையை விலக்கிவிட வந்த தந்தையை சரமாரி வெட்டி கொலை செய்த மகன்: மூலக்கொத்தளத்தில் பயங்கரம்

தண்டையார்பேட்டை: பூனை மீது பைக் மோதிய தகராறில் சண்டையை விலக்கிவிட வந்த தந்தையை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் மூலக்கொத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மூலக்கொத்தளம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரமுத்து (65). ஆட்டோ டிரைவர். இவரது மகன் குமார் (40) பெயின்டர். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

குமார், தினமும் மதுஅருந்திவிட்டு வந்து தந்தையிடம் சண்டை போடுவாராம். வழக்கம்போல் நேற்று இரவு குடிபோதையில் பைக் ஓட்டி சென்றபோது, குறுக்கே பாய்ந்த பூனை மீது பைக்கை ஏற்றியுள்ளார். இதை பார்த்து அதே பகுதியை சேர்ந்த வேலன் என்பவர், எதற்காக இவ்வளவு வேகமாக வருகிறாய் என கேட்டுள்ளார். இதனால் குமாருக்கும், வேலனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையறிந்து அங்கு வந்த வீரமுத்து, சண்டையில் இருந்து மகனை விலக்கி வீட்டுக்கு செல்லும்படி கூறியுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த குமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேலனை வெட்ட பாய்ந்தபோது தந்தை வீரமுத்து குறுக்கே வந்துள்ளார். இதில் அவரது கழுத்தில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். போதையில் தள்ளாடி கல் மீது விழுந்த குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்ததும் வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரமுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். படுகாயத்துடன் கிடந்த குமாரை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூனை மீது பைக் மோதிய தகராறில், சண்டையை விலக்கிவிட வந்த தந்தையை மகன் வெட்டிக்கொன்றது மூலக்கொத்தலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பூனை மீது பைக் மோதிய தகராறில் சண்டையை விலக்கிவிட வந்த தந்தையை சரமாரி வெட்டி கொலை செய்த மகன்: மூலக்கொத்தளத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Moolakothalam ,Thandaiyarpet ,Moolakottalam ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...