×

சென்னையில் மீண்டும் 44 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மார்ச் முதல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்வதும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,460க்கும், சவரன் ரூ.43,680க்கும் விற்பனையானது. கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.5,457-க்கு விற்பனையானது. 8ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,495க்கும், சவரன் ரூ.43,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை 10 தேதி சவரனுக்கு ரூ.304 உயர்ந்த நிலையில் நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,485-க்கும், சவரன் ரூ.43,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.18 உயர்ந்து ரூ.5,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து ரூ.77-க்கு விற்பனையாகிறது.

The post சென்னையில் மீண்டும் 44 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...