×

பள்ளி வேன் கவிழ்ந்ததில் மாணவன் பலி: 20 பேர் காயம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே பெரியகோட்டையில் தனியார் பள்ளி வேன் வேம்பத்தூர் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை நேற்று பள்ளிக்கு ஏற்றி சென்று கொண்டிருந்தது. சருகனேந்தல் என்ற இடத்தில் எதிரே வந்த டூவீலருக்கு வழி விடுவதற்காக டிரைவர் வேனை ரோடு ஓரமாக கொண்டு சென்றுள்ளார். அப்போது வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த ஹரிவேலன் (13) என்ற 7ம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்து இறந்தார். 20 மாணவ, மாணவிகள் காயத்துடன் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

The post பள்ளி வேன் கவிழ்ந்ததில் மாணவன் பலி: 20 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Periyakottai ,Manamadurai ,Vembathur ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்