×

நிர்வாண படம் அனுப்பிய பெண் அலறும் சேலம் தொழிலதிபர்கள்

சேலம்: சேலம் தொழிலதிபர்களின் செல்போன்களுக்கு நிர்வாண படங்களை அனுப்பிய இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு மொபைல் நம்பரில் இருந்து இளம்பெண்ணின் நிர்வாண படங்கள் வந்துள்ளது. அதை பார்த்த அந்த தொழிலதிபர், உடனடியாக அதை அழித்துவிட்டு, நண்பர்களான சில தறிப்பட்டறை அதிபர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களும், தங்களது செல்போன் வாட்ஸ்அப்பிற்கும் ஒரு பெண், தனது நிர்வாண படங்களை அனுப்பி வைத்துள்ளார் எனக்கூறியுள்ளனர்.

இதைகேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர், இதுதொடர்பாக புகார் ஏதும் கொடுக்காமல் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்து, விசாரிக்க கூறியுள்ளார். இதன்பேரில், பணம் பறிக்கும் நோக்கத்தோடு அப்பெண் நிர்வாண படங்களை அனுப்பினாரா? அல்லது வேறு யாரேனும் பெண்ணின் நிர்வாண படங்களை அனுப்பினார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பெண், இடைப்பாடி பகுதியில் தனது கணவரான லாரி டிரைவருடன் வசித்து வருவதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இவர் இதற்கு முன் திருச்செங்கோடு பகுதியில் உள்ள 2 பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் நிரப்பும் வேலை செய்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் பேரில், திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இச்சூழலில் தொழிலதிபர்களின் செல்போன் எண்களை எப்படி திரட்டினார் எனத்தெரியவில்லை. ஒரே நேரத்தில் இடைப்பாடி பகுதியை சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களுக்கு தனது நிர்வாண படங்களை அனுப்பி வைத்துள்ளார். அதனால், அந்த நபர்களுடன் பேசி பழகி பணம் பறிக்க திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post நிர்வாண படம் அனுப்பிய பெண் அலறும் சேலம் தொழிலதிபர்கள் appeared first on Dinakaran.

Tags : Salem ,District… ,
× RELATED சேலம் அருகே தொடர்மழை காரணமாக வீட்டின்...