×

பிரதமர், உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்: உ.பி. வாலிபர் கைது

தியோரியா: பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த உத்தரப்பிரதேச நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், தியோரியா கோட்வாதி காவல்நிலைய உதவி மையத்துக்கு ஞாயிறு இரவு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை அருண்குமார் என அறிமுகம் செய்துள்ளார். அவர் பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்ய இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து உடனடியாக அழைப்பு எங்கிருந்து வந்தது என சோதனை செய்ததில் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தேவ்ராத் கிராமத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பிரதமர், உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்: உ.பி. வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : PM ,U. ,Deoria ,Uttar Pradesh ,Modi ,
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...