×

ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல்

கவுகாத்தி: அசாமில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் – கன்னியாகுமரி விரைவு ரயில் ஒடிசா வந்த போது திடீரென புகை கிளம்பியது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர். அசாம் மாநிலம் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரி வரும் விரைவு ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஒடிசா மாநிலம் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென ரயில் பெட்டி ஒன்றில் புகை வந்தது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அந்த சமயத்தில் ரயில் உடனே நிறுத்தப்பட்டது. இதையடுத்து அலறியடித்துக்கொண்டு பயணிகள் கீழே இறங்கி ஓடினர். அப்போது ரயில் சக்கரத்தில் சிக்கி இருந்த சாக்குப்பையில் தீப்பற்றி புகை வந்து இருப்பது தெரிய வந்தது.

புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பிரம்மாபூர் ரயில்வே அதிகாரி பசந்தகுமார் சத்பதி கூறும்போது,’ பிரம்மாபூர் பகுதியில் ரயில் வந்த போது பிரேக் போட்டதால் பெட்டியின் சக்கரத்தில் சிக்கியிருந்த சாக்கு மூட்டை தீப்பற்றி புகை வந்தது. நாங்கள் சக்கரத்திலிருந்து சாக்கை அகற்றி, தீயை அணைத்தோம். ரயில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. பிரம்மாபூர் ஸ்டேஷனில் தீவிர சோதனை நடத்தப்பட்டது’ என்றார். இதன்பின் சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு நிலைமை சீரான பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டது. ஏற்கனவே ஒடிசாவில் 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 290 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

The post ஒடிசாவில் மீண்டும் பரபரப்பு கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல் appeared first on Dinakaran.

Tags : Kannyakumari ,Odissa ,Gauvagathi ,Dibrugar ,Odisha ,Assam ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி கடற்கரையோர மீனவ...