×

ஐஆர்எஸ் அதிகாரிக்கு 14 நாள் காவல்

மும்பை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லக்னோ சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி கூடுதல் ஆணையராக பணியாற்றிய சச்சின் பாலாசாகேப் சாவந்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். இவர் 2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மும்பை மண்டல அமலாக்கத்துறையில் துணை இயக்குனராக பணியாற்றியவர். இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post ஐஆர்எஸ் அதிகாரிக்கு 14 நாள் காவல் appeared first on Dinakaran.

Tags : IRS ,Mumbai ,Sachin Palasagepe ,Commissary ,Luxembourg ,GST ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...