×

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பாடியில் வரும் 14ம் தேதி திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு நலத்திட்ட உதவி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா பாடி இளங்கோநகர் பார்க் அருகில் வெள்ளிக்கிழமை (14ம்தேதி) மாலை 5 மணி அளவில் நடக்கிறது. அம்பத்தூர் எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தலைமை வகிக்கிறார். அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, டிஎஸ்பி ராஜகோபால், அம்பத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எம்.டி.ஆர்.நாகராஜ், எல்.பி.எஃப் மோகன், அம்பத்தூர் மாமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், ஜி.சாந்தகுமாரி பூர்ணிமா, கமல், எம்.இ.சேகர் ஆகியோர் வரவேற்கின்றனர்.

திமுக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, தூய்மை பணியாளர்கள், விளையாட்டு அணிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுக்கள் என 2000 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்குகிறார். நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில, மாவட்ட, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் மாவட்ட, பகுதி, அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு பாடியில் வரும் 14ம் தேதி திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,14th Djazhagam Pioneers ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Aryakinunga ,Eastern District ,Ambatore Assembly Constituency ,Badi ,14th Dizhagam Pioneers ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மக்களின்...