நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று வழக்கம் போல் மாணவி பள்ளிக்கு சென்றார். அப்போது திடீரென தலை சுற்றுவதாக கூறி மயக்கம் அடைந்தார். உடனே அவரை பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் நல குழும அதிகாரிகள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவியை பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக மாணவியிடம் விசாரணை நடத்திய போது தங்கள் கிராமத்தைச் சேர்ந்த உறவு முறையில் சித்தப்பா வழி கொண்ட சிவக்குமார் (53) என்பவர் மாணவிக்கு உதவுவது போல் நடித்து அவரை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. நாகர்கோவிலில் உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த சிவக்குமாரை நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.
The post பள்ளி மாணவி பலாத்காரம்: டீ மாஸ்டர் கைது appeared first on Dinakaran.
