×

சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்துக் குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!!

சிவகங்கை: பெரியகோட்டையில் தனியார் வாகனம் கவிழ்ந்ததில் 7ம் வகுப்பு மாணவர் ஹரி வேலன் பலியானார். சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றபோது சருகனேந்தல் என்ற பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பயணம் செய்த முனைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவன் ஹரிவேலன் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.மேலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயங்களுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சிவகங்கை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தனியார் பள்ளி வாகனம் வேகமாக சென்றதால் தான் இந்த விபத்து நடந்ததாக அந்த கிராமத்திலிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளி வாகனத்தில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஓட்டுனர்கள் தங்களது கவனக்குறைவால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் ஓட்டுனர்களை பணிக்கு அனுப்பும் போது முறையான சோதனை செய்து அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.

The post சிவகங்கை அருகே தனியார் பள்ளி வாகனம் விபத்துக் குள்ளானதில் 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Hari Velan ,Periyakottai ,Sivagangai District ,Vembathur ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்