×

சென்னை மதுரவாயல் உணவகத்தில் பார்சலில் வழங்கப்பட்ட இட்லியில் கரப்பான் பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னை: சென்னை மதுரவாயல் உணவகத்தில் வாடிக்கையாளருக்கு பார்சலில் வழங்கப்பட்ட இட்லியில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரவாயல் ஏரிக்கரையைச் சேர்ந்த மனோஜ் என்பவர், வானகரத்தில் உள்ள பிரபல உணவகம் ரூ.160 கொடுத்து நேற்றிரவு 8 இட்லியை பார்சல் வாங்கி சென்றுள்ளார். வீட்டிற்கு சென்று பிரித்து பார்த்தபோது ஒரு இட்லியில் கரப்பான் பூச்சி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அதனை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். பின்னர், இதுகுறித்து தொலைபேசியில் உணவகத்தை தொடர்பு கொண்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தொலைபேசி வாயிலாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். இந்நிலையில், இன்று கரப்பான் பூச்சி இருந்த இட்லியுடன் மனோஜ், அந்த உணவகத்துக்கு வந்து பணியாளர்களிடம் காண்பித்து முறையிட்டார். அப்பொழுது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இதே உணவகத்தில் தான் வாடிக்கையாளருக்கு பரிமாறிய பிரியாணியில் கோழியின் இறகு இருந்தது. அதேபோல கடந்த அக்டோபர் மாதமும் உணவில் பூரானும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை மதுரவாயல் உணவகத்தில் பார்சலில் வழங்கப்பட்ட இட்லியில் கரப்பான் பூச்சி: வாடிக்கையாளர் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Chennai ,Lakeside… ,Maduravayal restaurant ,Dinakaran ,
× RELATED மதுரவாயல் அருகே கூரியர் அலுவலகத்தில் தீ விபத்து