×

திருச்சியில் தள்ளுவண்டி டிபன்கடைக்காரர் மயங்கி விழுந்து சாவு

 

தில்லைநகர், ஜூலை 11: திருச்சியில் தள்ளுவண்டி டிபன் கடைக்காரர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருச்சி புத்தூர் குமரன்நகர் பேங்கர்ஸ் காலனியில் குடியிருந்து வருபவர் சென்னை வில்லிவாக்கம் திருநகரை சேர்ந்த புவனேஸ்வரி (36). இவருடைய கணவர் செந்தில் (49). இவர், தனசேகர் என்ற நண்பருடன் தள்ளுவண்டியில் தோசை கடை நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் ஏற்கனவே செந்தில் இறந்து விட்டதாக கூறினர். அதனைத் தொடர்ந்து உடல் ஜிஹெச் மார்ச்சுவரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருச்சியில் தள்ளுவண்டி டிபன்கடைக்காரர் மயங்கி விழுந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Pushcart ,Trichy ,Thillainagar ,Trichy Puthur Kumaranagar ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...