×

அன்றும் இன்றும் சென்னை-ராமேஸ்வரம் ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும்

 

முத்துப்பேட்டை, ஜூலை 11: ெசன்னை-ராமேஸ்வரம் ரயில் சேவையை விரைவில் துவங்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி நாச்சிகுளத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தெற்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், மாவட்ட துணைத் தலைவர் அசாருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ஹாஜா மைதீன், முகம்மது தவ்பீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் ராமேஸ்வரம் சென்னை ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.

The post அன்றும் இன்றும் சென்னை-ராமேஸ்வரம் ரயில் சேவையை விரைந்து துவங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chennai ,-Rameswaram ,Muthupapet ,Dawhit Jamaat ,Chesannai-Rameswaram ,Rameswaram ,Dinakaran ,
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...