- எம்பி ஜோதிமணி
- பொன்னமராவதி அரசு பள்ளி கட்டிடம்
- Ponnamaravati
- வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
பொன்னமராவதி,ஜூலை 11: பொன்னமராவதி அருகே வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1.30 கோடி மதிப்பில் தனியார் நிறுவனம் கட்டிக்கொடுத்த பள்ளிக்கட்டிடத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி மிஷின் மருத்துவமனைமூலம் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ.1.30 கோடி மதிப்பில் நவீன முறையில் அனைத்து வசதிகளுடன் கட்டிடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சிவகங்கை கலெக்டர் ஆஸா அஜித் தலைமை வகித்தார். மதுரை மீனாட்சி மிஷின் நிறுவனர் டாக்டர் சேதுராமன், அதன் தலைவர் டாக்டர் குருசங்கர், திட்ட இயக்குனர் சிவராமன், மாவட்டக்கல்வி அலுவலர் அம்பிகாபதி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதனைத்தொடர்ந்து புதிய பள்ளிக்கட்டிடத்தினை திறந்து வைத்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். முன்னதாக ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் அலமேலுமங்கை நன்றி கூறினார். இதில் பொறியாளர் விஎன்ஆர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழுஉறுப்பினர் ஜெயராமன், முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெகநாதன், பொதுக்குழுஉறுப்பினர் சிங்காரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post எம்பி ஜோதிமணி ஆய்வு பொன்னமராவதி அருகே ரூ.1.30 கோடி மதிப்பில் அரசு பள்ளி கட்டிடம் appeared first on Dinakaran.