×

கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது

 

கோவை, ஜூலை 11: கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மற்றும் அன்புராஜ் (42). இவர்கள் ஆட்டோ டிரைவர்களாக பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இவர்கள் வீரகேரளத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களிடம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த பகுதியில் பாலம் வேலை நடப்பதால் வேறு வழியில் செல்லுமாறு இருவரும் கூறினர். அப்போது அந்த வாலிபர்கள் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த சோபன்பாபு (26), தனது நண்பர்கள் தினேஷ் (29) மற்றும் குணசேகரன் (28) ஆகியோருடன் வந்து ஆட்டோ டிரைவர்களான அன்புராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை தாக்கினர். குணசேகரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்புராஜ் மற்றும் மணிகண்டன் ஆகியோரை குத்தினார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட அன்புராஜ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திய 3 பேரையும் கைது செய்தனர்.

The post கொலை முயற்சி வழக்கில் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Manikandan ,Anburaj ,Vadavalli ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...