×

பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி

 

இளையான்குடி, ஜூலை 11: இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம், சூராணம், விசவனூர், சாத்தனூர், கோட்டையூர், முனைவென்றி ஆகிய பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. நேற்று மதியம் மூன்று மணிக்கு இடி மின்னலுடன் ஆரம்பித்த மழை ஒரு மணி நேரம் விடாது பெய்தது. அதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீர் வழிந்தோடியது.

இந்நிலையில் இளையான்குடி மற்றும் சாலைக்கிராமம் பகுதியில் பருத்தி சாகுபடி மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், கண்மாய்களில் போதிய தண்ணீர் இல்லாமல், பருத்தி செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த மழைக்கு ஓரளவு ஈரப்பதம் உள்ளதால் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ilayayankudi ,Saaligram ,Suranam ,Visavanur ,Chatanur ,Kotdaiyur ,Nodnavenny ,Dinakaran ,
× RELATED இளையான்குடி பகுதியில் பருத்தி விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்