×

ஆசிரியர் தீக்குளிப்பு

 

அருப்புக்கோட்டை, ஜூலை 11: அருப்புக்கோட்டை மதுரைரோடு ராஜீவ்நகர் 30 அடி வீதியை சேர்ந்தவர் அழகர்சாமி(38). இவர் நரிக்குடி அருகே துய்யனூரில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கும் இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஓய்வுபெற்ற போலீஸ் ராஜாமணிக்கும் கழிவுநீர் உறைகுழி தோண்டுவது சம்பந்தமாக நேற்று பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது ராஜாமணி மற்றும் அவரது உறவினர்கள் அழகர்சாமியை மிரட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த அழகர்சாமி பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அருப்புக்கோட்டை டவுன் போலீசார் ராஜாமணி உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆசிரியர் தீக்குளிப்பு appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Alagarswamy ,Aruppukkottai Madurai Road, Rajivnagar ,Narikudi ,
× RELATED மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு:...