- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- ஆக்ஹோ முத்துச்சான் ஜெயந்தி
- அமைச்சர்
- ராஜா கன்னாபன்
- சென்னை
- ஜெயந்தி
- இந்தியா
- மகாவீர் அக்கு முத்துவான்
- அக்கு முத்துச்சன் ஜெயந்தி
சென்னை, ஜூலை 11: இந்திய சுதந்திர போராட்ட முதல் வீரர் மாவீரன் அழகு முத்துகோனின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதில் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில் வாரிய அமைச்சர் எஸ்.ஆர்.ராஜகண்ணப்பன் கூறியதாவது: இந்திய சுதந்திர போராட்ட முதல் வீரர் மாவீரன் அழகு முத்துகோனின் 313வது குருபூஜை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு அழைக்கிறேன். அழகு முத்துகோன் வீரத்தை போற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அழகு முத்துகோன் ஜெயந்தி விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை: பொதுமக்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் அழைப்பு appeared first on Dinakaran.