×

வேங்கைவயல் விவகாரம் 4 சிறுவர்களின் பெற்றோரிடம் நாளை கோர்ட்டில் விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களின் பெற்றோரிடம் நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடத்தப்படவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் டிசம்பர் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்த சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மனிதக்கழிவின் மரபணுவுடன் ஏற்கனவே விசாரிக்கப்பட்டவர்களின் மரபணுவையும் ஒப்பிட்டு பார்க்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, ஏற்கனவே 21 பேரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக வேங்கைவயலை சேர்ந்த ஒரு சிறுவன் மற்றும் இறையூரை சேர்ந்த 3 சிறுவர்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் அனுமதி கேட்டு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோர் சிறார்கள் என்பதால் அவர்களது பெற்றோர்களின் கருத்தை அறிய வேண்டியது அவசியம் என்பதால் அவர்களை 12ம்தேதி (நாளை) நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

The post வேங்கைவயல் விவகாரம் 4 சிறுவர்களின் பெற்றோரிடம் நாளை கோர்ட்டில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vengai field ,Pudukottai ,Vengai ,Pudukottai District ,Muthukadu Panchayat Venkaivyal ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED வேங்கைவயல் விவகாரம் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனை