- கலைஞர் நூற்றாண்டு கால்பந்து போட்டி
- செங்குன்ராம்
- பஞ்சாயத்து தி.மு.க
- கனம்பாக்கம்
- செங்குன்றம்
- ஜெனம்பாக்கம்
- தின மலர்
புழல்: செங்குன்றம் அருகே சென்றம்பாக்கம் ஊராட்சி திமுக சார்பில், கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, நேற்று சென்றம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் கால்பந்து விளையாட்டு திடலில் ஒரு நாள் எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாதவரம், சென்றம்பாக்கம், அயனம்பாக்கம், வியாசர்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 18 கால்பந்து அணிகள் பங்கேற்றன. இந்த கால்பந்து போட்டியை மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இப்போட்டியில் சென்றம்பாக்கம் மனிஷ் அணி முதலிடத்தையும், அயனம்பாக்கம் அம்பேத்கர் அணி இரண்டாவது இடத்தை பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா நேற்றிரவு புழல் ஒன்றிய திமுக செயலாளரும் வழக்கறிஞருமான புழல் சரவணன் தலைமையில் நடந்தது. சென்றம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.ராமு, நெசவாளர் அணி மாவட்ட தலைவர் பாஸ்கரன், புரட்சி பாரதம் ஒன்றிய செயலாளர் லோகு ஆடலரசு ஆகியோர் பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளின் தலைவர்களுக்கு பைக், 18 அணிகளின் வீரர்களுக்கு சைக்கிள் பரிசாக வழங்கி பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் அம்பேத்கர் கால்பந்துட்ட குழுவினர் செய்திருந்தனர்.
The post செங்குன்றம் அருகே கலைஞர் நூற்றாண்டு கால்பந்தாட்ட போட்டி appeared first on Dinakaran.