- உதவி இயக்குனர்
- விவசாயம்
- தோட்டக்கலை
- மலை ரைன்ஸ் துறை
- தஞ்சாவூர்
- முதல் அமைச்சர்
- முசிகர் ஜி.கே.ஸ்டாலின்
- உதவியாளர்
- மலைத்துறை
- தின மலர்
தஞ்சாவூர், ஜூலை 10: கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது . இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படியும் , தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக செயல்பட்டு வரும் டான்ஹோடா விற்பனை நிலையத்தில் பொதுமக்களின் நலன்கருதி குறைந்த விலையில் தக்காளி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.
இங்கு குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் தினசரி டான்ஹோடா விற்பனை நிலையத்தை அணுகி இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் , தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி, தோட்டக்கலை உதவி அலுவலர் வெங்கடாசலபதி,வேளாண்மை உதவி அலுவலர் அமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் தஞ்சாவூரில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை appeared first on Dinakaran.