×

தொழிலாளி திடீர் சாவு

 

சின்னசேலம், ஜூலை 10: சின்னசேலம் அருகே கல்லாநத்தம் புதுகாலனியை சேர்ந்தவர் பாஸ்கர்(38). இவரது மனைவி ராஜேஸ்வரி(36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்பட 3 குழந்தைகள் உள்ளனர். இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி காலை 10 மணியளவில் பாஸ்கருக்கு திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டதால் கல்லாநத்தம் அருகே ஊனத்தூரில் உள்ள ஒரு மெடிக்கலில் சிகிச்சைக்காக அவரது மனைவி ராஜேஸ்வரி அழைத்து சென்றார். அப்போது அங்கிருந்தவர் பரிசோதித்து ஊசி போட்டதுடன், 2 வேளைக்கு மாத்திரை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து பாஸ்கர் வீட்டிற்கு வந்து மாத்திரை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கை, கால் இழுத்ததுடன், வாயில் நுரை வரத்தொடங்கியது. மேலும் உடல் வியர்க்க தொடங்கியது. இதையடுத்து அவரை உடனடியாக வாகனத்தில் அழைத்து வந்து சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். ஆனால் அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு அறிவுரை கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்றபோது பாஸ்கரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பாஸ்கர் மனைவி ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தொழிலாளி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Chinnasalem ,Bhaskar ,Gallanatham ,Pudukalani ,Rajeshwari ,
× RELATED மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு