×

புகையிலை, மது விற்ற மளிகை கடைக்கு சீல்

பல்லடம், ஜூலை10: பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர்கள் பாக்கியநாதன்(34), பெரியராஜ்(32) மளிகை கடை நடத்தி வரும் சகோதரர்களான இவர்கள் கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக தெரிகிறது. இதையறிந்து அங்கு சென்ற போலீசார் அங்கிருந்த புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல உணவு பாதுகாப்புத் துறையினர் காலாவதியான உணவுப் பொருட்கள் வைத்திருந்ததாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த மளிகை கடையில் புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்புக் குழுவின் பரிந்துரையின் பேரில், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் உள்ளிட்ட குழுவினர், புகையிலை பொருட்கள் மதுவிற்ற அவர்களது மளிகை கடைக்கு சீல் வைத்தனர்.

The post புகையிலை, மது விற்ற மளிகை கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Bhakyanathan ,Periyaraj ,Ganapathipalayam ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...