- யூனியன் அரசு
- ஸ்ரீ
- இலங்கை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அன்னபூரணி
- சென்னை
- பம்பாக்கா
- அன்பரமணி
- ராமேஸ்வரம்
- வங்காள கடல்
- இலங்கை
சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஒரு குழுவினர் விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்த குழுவை கைது செய்வது என சிங்களப் படை திட்டமிட்டு அத்துமீறுகிறது. இது தொடர்பாக இந்திய – இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணவும், இலங்கைப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்டவும் ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 15 பேரை விடுதலை செய்யவும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
The post தமிழக மீனவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ள இலங்கையின் அத்துமீறலுக்கு ஒன்றிய அரசு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.