×

யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒரு மாதம்தான் அங்கே இருப்போம்: ஏ.கே.மூர்த்தி ஒப்புதல்

சிவகாசி: தேர்தல் நேரங்களில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஒரு மாதம்தான் கூட்டணியில் இருப்போம் என, முன்னாள் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கூறினார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பாமக தென் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களின் குரலாக பாமக செயல்பட்டு வருகிறது. தமிழக ஆளுநர் அவருக்கு கொடுத்த வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்.

அரசியல் பேசக்கூடாது. ஆளுநர் அரசியல் பேசுவதை பாமகவும், தமிழக மக்களும் விரும்பவில்லை. மது எதிர்ப்பு கொள்கையில் பாமக ஒரு அடி கூட பின்வாங்கவில்லை. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக தலைமையில்தான் கூட்டணி அமையும். தேர்தல் நேரங்களில் பாமக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் ஒரு மாதம்தான் கூட்டணியில் இருப்போம். அதன் பின்பாக தனித்து செயல்பட்டு நல்லது யார் செய்தாலும் பாராட்டுவோம். தீமை செய்வதை தட்டிக் கேட்போம்’’ என்றார்.

The post யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒரு மாதம்தான் அங்கே இருப்போம்: ஏ.கே.மூர்த்தி ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : AK Murthy ,Sivakasi ,BAM ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை