×

திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது

திருத்தணி: திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிவைத்திருந்தவரை கைது செய்தனர். திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்றுவருவதாக கிடைத்த தகவல்படி, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவின்படி, உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் நேற்று, திருத்தணி குமரன் நகர் 2வது தெருவில் சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (50) என்பவர் தனது வீட்டில் 35 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ராமச்சந்திரனை கைது செய்து காவல்நிலையம் கொண்டுவந்து விசாரித்தனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘’திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள சிறிய பெட்டி கடைகள், வீடுகளில் பதுக்கிவைத்து கஞ்சா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. பெயருக்கு ஒரு வழக்கை போட்டுவிட்டு போலீசார் நிறுத்தி விடுகின்றனர். தொடர் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிடவேண்டும்’ என்றனர்.

 

The post திருத்தணி அருகே வீட்டில் கஞ்சா பதுக்கியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirutani ,Thiruthani ,Government of Tamil Nadu ,Tiritani ,Corrector ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...