×

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தடுப்புச்சுவர்

வால்பாறை: வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் கரையோரம் கட்டப்பட்டிருந்த நகராட்சி தடுப்பு சுவர் நேற்று மாலை ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. வால்பாறை பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் ஆற்று நீர் மட்டம் கடந்த வாரம் முழுவதும் உயர்ந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதியில் சில வீடுகள் முன்பு இருந்த தடுப்பு சுவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. குடியிருப்பு வாசிகள் பாதுகாப்பான பகுதிக்கு சென்றனர். தடுப்புசுவரை போர் கால அடிப்படையில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

The post ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தடுப்புச்சுவர் appeared first on Dinakaran.

Tags : WALPARA ,Walbara Banavavatam ,Dinakaran ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்