×

குத்தாலம் அருகே மருத்தூரில் கீழே விழும் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம்: குத்தாலம் அருகே மருத்தூரில் கீழே விழும் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், மருத்தூர் ஊராட்சி, மருத்தூர் மெயின்ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ளது. இந்த மின் கம்பத்தில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றது. இதனால் மின் கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாலையில் முறிந்து விழுந்து விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மின்சார வாரிய அதிகாரிகள் மின்சாரத்தில் அலட்சியம் காட்டாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் உடனடியாக சாலையோரம் சேதமடைந்து கிடக்கும் மின் கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்தி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குத்தாலம் அருகே மருத்தூரில் கீழே விழும் ஆபத்தான மின் கம்பத்தை மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Marutur ,Kuttalam ,Muttur ,Kutthalam ,Dinakaran ,
× RELATED சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு