சென்னை: திராவிட அரசுகளின் ஆதி விதையாக விளங்கும் பனகல் அரசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலைய பாதுகாப்பு சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் பனகல் அரசர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; “திராவிட அரசுகளின் ஆதிவிதையாக விளங்கும் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று.
அதிகாரத்தை நாம் அடைவதன் மூலம் நமது மக்களுக்கு நம்மால் எத்தகைய நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான அரசாணை, மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவையில்லை, பெண்களுக்கு வாக்குரிமை, அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் போன்ற எண்ணற்ற புரட்சிகரத் திட்டங்களால் காட்டியவர் அவர்.
பனகல் அரசர் பற்றிய துணைப்பாடக் கட்டுரைதான் பள்ளி மாணவராக இருந்த கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாக விளங்கியது. “தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்” எனத் தந்தை பெரியார் போற்றிய பனகல் அரசர் வழிநடப்போம் தமிழ்நாட்டை முன்னேற்றுவோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post திராவிட அரசுகளின் ஆதி விதையாக விளங்கும் பனகல் அரசர் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.