×

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 13 மீனவர்களை கைது செய்ததோடு 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

4 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நெடுந்தீவு அருகே மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள்13 பேரையும் கைது செய்தனர்.

மீனவர்களை கைது செய்ததோடு மீன்பிடிக்க பயன்படுத்திய 2 படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Rameswaram Fishermen ,Naval ,Attlety ,Rameswaram ,Sri Lankan Navy ,Nedundivu ,Sri Lanka Navy ,
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...