×

அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு கரூர், தாந்தோணிமலை பகுதியில் குட்கா பதுக்கி விற்க முயன்ற 5 பேர் மீது வழக்கு

கரூர், ஜூலை 9: கரூர், தாந்தோணிமலை மற்றும் வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக ஐந்து பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டததின் பல்வேறு பகுதிகளில் மறைமுகமாக குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்கள் மீது அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், கரூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் வழக்கு பதிந்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிந்தம்பாளையம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேர்வீதி, வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலைவீதி, ரெங்கபாளையம் பிரிவு, நொய்யல் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக் கடைகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 5 பேர்கள் மீது அந்தந்த பகுதி போலீசார் வழக்குப்பதிந்து 800 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு கரூர், தாந்தோணிமலை பகுதியில் குட்கா பதுக்கி விற்க முயன்ற 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Karur, Dandonimalai ,Gutka ,Karur ,Thanthonimalai ,Velayuthampalayam ,Karur, Thanthonimalai ,Dinakaran ,
× RELATED குட்கா பதுக்கி விற்ற கடைக்காரர் கைது