×

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி

கந்தர்வகோட்டை,ஜூலை 9: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி வட்டார வளமையம், அக்கச்சிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுநகர், குளத்தூர் நாயக்கர்பட்டி, வேலாடிப்பட்டி உயர்நிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இப்ப பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி வட்டார வளமையத்தில் நடைபெற்ற பயிற்சியினை துவங்கி வைத்தார்.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜு, புதுநகர், அக்கச்சிபட்டி மையங்களில் நடைபெற்ற பயிற்சியினை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு கருத்துக்களை வழங்கினார். இப்பயிற்சியில் உடல்நலம், நல்வாழ்வு மற்றும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் சார்ந்து விரிவாக பயிற்சியளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஆசிரியர்கள் பாஸ்கர், ஜெயராஜ், வாசுகி, தேவநேசன், ராமலெட்சுமி, செல்வி, புனிதா, சுமத்திரா தேவி, ராஜேஸ்வரி, பிரியா, கோகிலா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் (பொ) பிரகாஷ், ஆசிரியர் பயிற்றுநர்கள் சங்கிலி முத்து, பாரதிதாசன், ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் இயன்முறை மருத்துவர் சரண்யா, சிறப்பாசிரியர்கள் ரம்யா, ராணி, அறிவழகன், ராதா, பிரியா, லீலா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் சார்ந்த கருத்துக்களை ஆசிரியர்களுக்கு வழங்கினர்.

The post கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Gandharvakota Union ,Kandarvakottai ,Kandarvakottai District ,Pudukottai District ,Primary Education ,
× RELATED கந்தர்வகோட்டை அருகே கிணற்றில் தவித்த...