காளையார்கோவில், ஜூலை 9: சிவகங்கை மாவட்ட காவல் துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பாலசிங்கம் தலைமையில், காளையார்கோவில் காவல் சரகம் பெரிய நரிக்கோட்டையில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், ஊராட்சி தலைவர் மெய்ஞானமூர்த்தி காவல் சார்பு ஆய்வாளர்கள் தேவராணி மற்றும் தமிழ்செல்வி, அப்பகுதி பள்ளி மாணவ,மாணவிகள் மேப்பல் மற்றும் சாத்தப்புளி கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தனர்.
மேப்பல் கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்கவும், சாலை வசதி, அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர, ரேசன் கடை, பேருந்து வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர். சாத்தப்புளி கிராமத்தில் குடிநீர் வசதி, சமுதாய கூடம், ரோடு வசதி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினர். ஆதிதிராவிடர் இன மக்களுக்கான அரசு திட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
The post விழிப்புணர்வு கூட்டம் appeared first on Dinakaran.