×

சாத்தான்குளம் அருகே நில பிரச்னையில் தும்பு ஆலைக்கு தீ வைத்தவர் கைது

சாத்தான்குளம், ஜூலை 9: சாத்தான்குளம் அருகே நில பிரச்னையில் தும்பு ஆலைக்கு தீவைத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளம் அருகேயுள்ள அதிசயபுரத்தைச் சேர்ந்த தாமஸின் மகன் சுவிஸ்கார் ஜோசப் (29). இவர் அதே பகுதியில் தான் நடத்திவரும் தும்பு ஆலையை கடந்த 18ம்தேதி பூட்டிவிட்டு சர்ச்சுக்கு சென்றார். சிறிதுநேரத்தில் ஆலையில் தீப்பற்றி எரிவதாக தகவல் வந்தது. அதன்பேரில் விரைந்து சென்று பார்த்தபோது இயந்திரம் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது தெரியவந்தது. இதன் சேத மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து தட்டார்மடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப் பதிவுசெய்த இன்ஸ்பெக்டர் பவுலோஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நில பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஏனோக் மகன் ஞான்ராஜ்(37) என்பவர் தும்பு ஆலைக்கு தீ வைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஞான்ராஜை கைதுசெய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சாத்தான்குளம் அருகே நில பிரச்னையில் தும்பு ஆலைக்கு தீ வைத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Sathankulam ,Chatankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...