×

டிராக்டர் திருடிய நபர் கைது

தவளக்குப்பம், ஜூலை 9: புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அருகே முத்துப்பிள்ளைப்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜா (45). பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர், சொந்தமாக டிராக்டர் மற்றும் ஹைட்ராலிக் பெட்டி வண்டி வைத்துள்ளார். இதன் மூலம் அவர் வேலை செய்து வந்த நிலையில் சைட் வேலை முடிந்தவுடன் டிராக்டரை அங்கேயே நிறுத்தியிருந்தார். மீண்டும் கடந்த மார்ச் மாதம் சென்று பார்த்தபோது நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, அக்கம்பக்கம் விசாரித்ததில் அருகே உள்ள தமிழக பகுதியான கீழ்குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுந்தர் (எ) தனசேகர்(42) டிராக்டரை பெட்டியுடன் திருடிச் சென்றது தெரியவந்தது. பலமுறை சுந்தரை தொடர்பு கொண்ட போதிலும் டிராக்டரை ராஜாவிடம் அவர் ஒப்படைக்கவில்லை. இதையடுத்து சுந்தர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி தவளக்குப்பம் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுந்தர் (எ) தனசேகரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

The post டிராக்டர் திருடிய நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thavalakuppam ,Raja ,Muthupillaipalayam Metuth Street ,Arumbarthapuram, Puducherry ,Dinakaran ,
× RELATED கோயில் கும்பாபிஷேகத்திற்கு பூஜை...