×

நித்திரவிளை அருகே முள்வேலியை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு

நித்திரவிளை, ஜூலை 9: நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் வல்சலம் ரோஸ் (69). இவருக்கு சொந்தமான நிலம் தேரிவிளை பகுதியில் உள்ளது. அதை சுற்றி வேலிக் கற்களால் முள்வேலி அமைத்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ், சேவியர், ஜோஸ்பின் ஆகியோர் நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்ததோடு, முள்வேலியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இது சம்பந்தமாக வல்சலம் ரோஸ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நித்திரவிளை அருகே முள்வேலியை சேதப்படுத்திய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Nithravila ,Nithravilai ,Valsalam Rose ,Krattur ,Terivlai ,Nithrivila ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே மர்மமாக இறந்த...