×

தந்தையை சந்திக்க முடியாமல் மீண்டும் சிறை திரும்பிய மதானி

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரான அப்துல் நாசர் மதானி பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரளாவில் வசிக்கும் மதானியின் தந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சந்திக்க கேரளா செல்ல மதானிக்கு 12 நாள் தற்காலிக அனுமதியை உச்ச நீதிமன்றம் வழங்கியது.

கடந்த மாதம் 26ம் தேதி மதானி பெங்களூருவிலிருந்து சொந்த ஊரான கொல்லம் மாவட்டம் அன்வார்சேரிக்கு புறப்பட்டார். ஆனால் உடல் நலக்குறைவால் கொச்சி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். உச்சநீதிமன்றம் அளித்த 12 நாள் தற்காலிக அனுமதி முடிவடைந்துவிட்டதால் தந்தையை சந்திக்க முடியாமல் நேற்று மதானி பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

The post தந்தையை சந்திக்க முடியாமல் மீண்டும் சிறை திரும்பிய மதானி appeared first on Dinakaran.

Tags : Madani ,Thiruvananthapuram ,People's Democratic Party ,PDP ,Kerala ,Abdul Nasser Madani ,Bengaluru ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...