×

வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் இருக்கை வசதி கொண்ட ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் 25% கட்டணக் குறைப்பு..!!

டெல்லி: வந்தேபாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் ஏசி இருக்கை வசதி கொண்ட வகுப்புகளில் ரயில்வே வாரியம் 25 சதவீதம் கட்டண குறைப்பு செய்துள்ளது. இந்த கட்டணகுறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் ஓராண்டு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரயில்களில் பகல் நேர பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் கட்டண குறைப்பை செய்வதற்கான அதிகாரத்தை ரயில்வே வாரியத்திடம் வழங்கி ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் இருக்கை வசதி கொண்ட ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் 25 சதவீத கட்டணக் குறைப்பு செய்யப்படுகிறது. அதன்படி அடிப்படை பயணக்கட்டத்தில் இருந்து இந்த 25 சதவீத குறைப்பு செய்யப்படும் எனவும் ஜிஎஸ்டி போன்ற பிற கூடுதல் கட்டணங்கள் வழக்கம் போல வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல கடந்த 1 மாதத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் பயணம் செய்துள்ள ரயில்களிலும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் கட்டான சலுகை வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டான குறைப்பு வருகிறது என்றாலும் ஏற்கனவே முன்பொதிவு செய்துள்ள பயணிகளுக்கும் தட்கல் ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கும் இந்த கட்டான குறைப்பு பொருந்தாது எனவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் பயணிகளின் எண்ணிக்கை உயரும் போது இந்த கட்டண குறைப்பில் மாற்றம் செய்யப்படும் அல்லது திரும்ப பெறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் இருக்கை வசதி கொண்ட ஏசி எக்ஸிகியூட்டிவ் வகுப்புகளில் 25% கட்டணக் குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Railway Board ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...