×

திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக உழவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை பார்க்க முடிகிறது. விவசாயிகளுக்கு கடன் மானியம் வழங்குவதில் அக்கறையோடு செயல்படுகிறோம். தமிழ்நாட்டில் வேளாண் புரட்சி ஏற்பட்டுள்ளது; இதற்கு மகுடம் சூட்டுவது போல் வேளாண் திருவிழா நடைபெறுகிறது. விவசாயிகள் விற்பனையாளராக மாற வேண்டும் என்பதற்காக உழவர் சந்தைகளை கலைஞர் ஏற்படுத்திக் கொடுத்தார் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

The post திமுக அரசின் வேளாண் திட்டங்களால் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Government of Dishagam ,Chief Minister ,MC G.K. Stalin ,Chennai ,Dijagam government ,G.K. Stalin ,Government of Djagar ,B.C. ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...