×

நாளை மறுநாள் மின் தடை பகுதிகள்

 

ஊட்டி,ஜூலை8: உப்பட்டி, சேரம்பாடி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் நாளைமறுநாள் (10ம் தேதி) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ரமேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உப்பட்டி,சேரம்பாடி மற்றும் கூடலூர் துணை மின் நிலையங்களில் நாளைமறுநாள்(10ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், அன்றைய தினம் இந்த துணை மின் நிலையங்களை சேர்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

உப்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட உப்பட்டி, பொன்னாணி, தேவாலா, பந்தலூர், அத்திக்குன்னா, கொளப்பள்ளி, எல்லமாலா, நாடுகாணி, குந்தலாடி, ராக்வுட், அய்யன்கொல்லி, வுட் பிரேர் மற்றும் 3வது டிவிசன் ஆகிய பகுதிகளிலும்,சேரம்பாடி டவுன், கன்னம்வயல், நாயக்கன்சோலை, கையுன்னி, எருமாடு, தாளூர், பொன்னச்சேரர், கக்குண்டி,சோலாடி ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

இதே போல கூடலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கூடலூர், நந்தட்டி, சூண்டி, மரப்பாலம், செம்பாலா, ஓவேலி, 1வது மைல், 2வது மைல், காந்திநகர், முதுமலை, அத்திப்பள்ளி, தொரப்பள்ளி, பாடான்துரை, ஸ்ரீ மதுரை, மண்வயல், தெப்பக்காடு, பாட்டவயல், நெலக்கோட்டை, கார்குடி மற்றும் தேவர்சோலை ஆகிய பகுதிகளிலும் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு மேற்பார்வை பொறியாளர் ரமேஷ்குமார் கூறியுள்ளார்.

The post நாளை மறுநாள் மின் தடை பகுதிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Upatti ,Cherambadi ,Kudalur ,Dinakaran ,
× RELATED பெரியநாயக்கன்பாளையம் அருகே...