×

கஞ்சா விற்ற ரவுடி கைது

அண்ணாநகர்: முகப்பேர் கோல்டன் ஜார்ஜ் மேம்பாலம் அருகே கஞ்சா விற்பனை செய்த வடபழனி பகுதியை சேர்ந்த ரவுடி ஜகா (எ) ஜெகதீஸ்வரன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து முகப்பேர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரவுடி ஜகா, மீது ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் 2021ம் ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் போலீசார் ஜகாவை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மாணவன் கைது: புளியந்தோப்பு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நபரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவைச் சேர்ந்த யோவாஸ் (19) என்பதும் இவர் வேப்சரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருவதும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து யோவாஸ் மீது வழக்குப்பதிவு செய்த பேசின் பிரிட்ஜ் போலீசார் அவரை நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்ற ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Annanagar ,Rowdy Jaga ,Vadapalani ,Mukapper Golden George ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...