×

கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரயிலில் அடிபட்டு பலி

 

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) ஜெபராஜ்(30). இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 15 வழக்குகள் உள்ளன. இவர் சரித்திர பதிவேடு குற்றவாளி. இந்நிலையில் ஜெபராஜ் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயிலில் அடிபட்டு பலியானதாக திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் ஜெபராஜ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது ரயில்வே பாதையை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானாரா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி ரயிலில் அடிபட்டு பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Santhosh (A) Jebaraj ,30 ,Vepampatu Kalain Nagar ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...