×

பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பரிதாப பலி

பூந்தமல்லி: மதுரவாயல் பைபாஸ் சாலையில், பைக்கின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நித்தியானந்தம்(24). குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி வேலை தேடி கொண்டிருந்தார். இவர், நேற்று முன்தினம் அம்பத்தூரில் உள்ள தனியர் கம்பெனியில் வேலைகேட்டு செல்வதற்காக, தனது நண்பரிடமிருந்து பைக்கை வாங்கிக்கொண்டு, தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மதுரவாயல் அருகே நித்தியானந்தம் சென்ற பைக்கின் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த நித்தியானந்தம் பலத்த காயமடைந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்போடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலத்த காயமடைந்த நித்தியானந்தத்தை மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நித்தியானந்தம், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பைக் மீது வாகனம் மோதி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Maduravayal Bypass road ,Villupuram district ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது