புவனேஷ்வர்: பாலசோர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக 3 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. சீனியர் பிரிவு பொறியாளர் அருண்குமார் மோகந்தா, பொறியாளர் முகமது அமீர்கான், தொழில்நுட்ப ஊழியர் பப்பு குமார் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர். பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாகநாகாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 290-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
The post நாட்டையே உலுக்கிய ரயில் விபத்து தொடர்பாக பொறியாளர் ஒருவர் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.