×

கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

சென்னை: கோயம்புத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் சி. விஜயகுமார் IPS. அவர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். பல முக்கியமான வழக்குகளை திறம்பட கையாண்ட பெருமைக்குரியவர் விஜயகுமார். இவரது மறைவு காவல் துறைக்கு மிகப் பெரிய இழப்பு. மறைந்த விஜயகுமார் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், தனது வீட்டில் பணியிலிருந்த காவலரின் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியினைப் பார்க்கும்போது, பணிச்சுமையும், மன உளைச்சலும் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகம் நிலவுகிறது. இது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடவும், காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி அவர்களது பணிச்சுமையை குறைக்கவும், அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வவ்ம் கூறியுள்ளார்.

தமிழக காவல்துறையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பவர் விஜயகுமார். தேனி மாவட்டத்தைப் பின்னணியாக கொண்ட இவர் 2009 ல் ஐ.பி.எஸ் பேட்ஜில் பணியில் சேர்ந்தவர் ஆவார். நீட் தேர்வு மற்றும் சிவசங்கர் பாபா வழக்குகளில் சிறப்பு விசாரணை நடத்தியவர். காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூரில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த விஜயகுமாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் கோவை டி.ஐ.ஜி யாக பொறுப்பேற்றார்.

The post கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயகுமார் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் appeared first on Dinakaran.

Tags : Goa Saraka Police DIG ,Vijayakumar ,Chennai ,Saraka Police Department ,Deputy ,C. Vijayakumar ,IPS ,Goo Sarakaki Police ,
× RELATED கேளம்பாக்கம் அருகே மனைவி கழுத்து...