×

நீலகிரியில் 4, தென்காசியில் 5 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாஹே பகுதியில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை!!

நீலகிரி :தென் மேற்கு பருவமழை கேரளா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் கொட்டி தீர்த்து வருகிறது. கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருவதால், அங்கு கண்ணூர் பகுதிக்கு அருகிலுள்ள, புதுச்சேரி பிராந்தியத்துக்கு உட்பட்ட மாஹே பகுதியில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேரளாவிலும் கோழிக்கோடு, கண்ணூர், கோட்டயம், காசர்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 5 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.அதே போல தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஐந்து வட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, செங்கோட்டை ,கடையநல்லூர், கடையம் மற்றும் கீழ்பாவூர் வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பினை கருதி இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

The post நீலகிரியில் 4, தென்காசியில் 5 தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. மாஹே பகுதியில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,South Kasi ,Mahe ,Nilagiri ,South West ,Kerala ,Tamil Nadu ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு...