×

திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை

திண்டுக்கல், ஜூலை 7: திண்டுக்கல் அருகே பிஸ்மி நகரை சேர்ந்தவர் ஹக்கீம். இவரது மனைவி சகிலா பானு (41). இவர்களது மகள் அப்ரோனா பானு (18). ஹக்கீம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் சகிலாபானு அதே பகுதியை சேர்ந்த அம்ஜா என்பவரை திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். அப்ரோனா பானு 9ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த 3 ஆண்டுகளாக வீட்டில் இருந்துள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள அரபு பாடசாலைக்கு சென்று படித்து வந்தார்.

இந்நிலையில் அவர், கடந்த சில நாட்களாக பாடசாலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது தாயார் பாடசாலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அப்ரோனா பானு அவரது வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அப்ரோனா பானுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா எஸ்ஐ பாலசுப்ரமணியன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Teen ,Dindigul ,Hakeem ,Bismi ,Sakila Bhanu ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...