×

கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

 

கோவை ஜூலை 7: கோவை ராமநாதபுரம் நீர் மணியக்காரர் வீதி பகுதியை சேர்ந்தவர் சசி மோகன். ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி துர்கா (25). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. துர்காவும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். இதைத்தொடர்ந்து இவர் அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். சமீபத்தில் துர்கா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு தனி அறையில் இருந்த இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வருகின்றனர். ஆர்டீஓ விசாரணையும் நடக்கிறது. துர்கா சிறிய விஷயங்களுக்கு அதிகமாக கவலைப்படும் இயல்பு கொண்டவராக இருந்துள்ளார். தற்கொலை செய்வதற்கு சில மணி நேரம் முன் கணவரிடம் செல்போனில் சில நிமிட நேரம் இயல்பாக பேசி உள்ளார். பின்னர் தனது சகோதரர் மற்றும் தாய் ஆகியோர் கடைக்கு சென்ற நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவரது செல்போன், லேப் டாப்பில் தற்கொலைக்கான தகவல்கள் எதாவது உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Sasi Mohan ,Ramanathapuram Neer Maniyakar Road ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...